திங்கள், 22 டிசம்பர், 2014

4. ஐரோப்பாவும் ஆசியாவும்

நைனிடால் சிறையில் இருந்து ஜவஹர்லால் நேரு தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய Glimpses of World History என்கிற கடிதங்களின் மொழிபெயர்ப்பு. 

                                  ---------------------------------------------------
ஜனவரி 8 - 1931.

எல்லாமே மாறிக்கொண்டுதான் இருக்கின்றது. இந்த மாறுதல்களின் பதிவுதான் வரலாறு. இந்த மாற்றங்கள் குறைவாக இருக்குமானால், வரலாறு என்பதும் சிறியதாகத்தான் இருக்கும். 

நமது பாடத்திட்டத்தில் வரலாறு சரியான முறையில் கற்றுக்கொடுக்கப்படவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். பிறரைப் பற்றி நான் அறியேன், ஆனால் நிச்சயமாக நான் பள்ளியிலும், கல்லூரியிலும் சரியான வரலாற்றைப் படிக்கவில்லை. இந்திய வரலாற்றைப் பற்றியும், இங்கிலாந்து நாட்டைப் பற்றியும் மிகக் குறைவாகவே நான் கற்றுக்கொண்டேன். நான் படித்த குறைவான அளவிலான இந்திய வரலாறும், தவறானதாகவும், திரிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. இந்தியாவைப் பற்றிய எந்தவிதப் புரிதலும் இல்லாத ஆசிரியர்களால் அவை எழுதப் பட்டு இருந்தது. பிற நாடுகளைப் பற்றியும் மிகக் குறைவாகவே நான் படித்து இருந்தேன். கல்லூரியை விட்டு வெளியேறிய பின்னரே நான் சரியான சரித்திரத்தைப் படிக்க ஆரம்பித்தேன் என்றே கூறலாம். நீண்ட எனது சிறைவாசங்கள் நான் படிப்பதற்கு மிக உதவியாக இருந்தது. 

எனது முந்தய கடிதம் ஒன்றில் நான்  உனக்கு இந்தியாவின் மிகப் பழங்கால நாகரீகத்தைப் பற்றியும், திராவிடர்கள் மற்றும் ஆரியர்கள் வருகை பற்றியும் கூறி இருந்தேன். ஆரியர்களுக்கு முந்தய காலம் பற்றி எனக்கு சிறிதளவே தெரியும் என்பதால், அந்தக் காலம் பற்றி நான் கூறமுடியாது. ஆனால் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் மொஹஞ்சதாரோ என்ற இடத்தில ஒரு பழங்கால நாகரீகத்தை அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கண்டுபிடித்து உள்ளனர். எகிப்தில் உள்ளது போல, அங்கே பதப்படுத்தப் பட்ட சடலங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளது. அவற்றின் காலம் ஆரியர்களின் வருகைக்கு முன்னர், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர். அநேகமாக அப்போது ஐரோப்பா இருளில் மூழ்கி இருந்திருக்கும். 

இன்று ஐரோப்பா வலிமையோடு இருக்கிறது, அதன் மக்கள் மற்ற எல்லோரையும் விட நாகரீகமானவர்கள், கலாசாரமானவர்கள் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அவர்கள் ஆசிய மக்கள் அனைவரையும் கீழானவர்கள் என்று எண்ணி, இந்த கண்டத்தில் உள்ள எல்லாவற்றையும் சூறையாடிச் செல்லுகிறார்கள். காலம் தான் எப்படி மாறி உள்ளது ?

உலக வரைபடத்தைப் பார்த்தோமானால், ஐரோப்பா ஆசியா கண்டத்தை ஒட்டிக் கொண்டு இருப்பதைக் காண முடியும்.  காலம் காலமாக ஆசியக் கண்டத்தைச் சார்ந்த மக்கள் அலைகடல் என ஐரோப்பியாவிற்கு படை எடுத்துச் சென்றனர், ஐரோப்பியாவை வென்று, அங்கே தங்கள் நாகரீகத்தை நிலைநாட்டினர். அங்கே நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்தனர் என்றே சொல்லலாம்.

ஆரியர்கள், ஹுனர்கள், மங்கோலியர்கள், துருக்கியர்கள், அரபிக்கள் - இவர்கள் எல்லோரும் ஆசியாவின் எதோ ஒரு மூலையில்  கிளம்பி, ஆசியா மற்றும் ஐரோப்பியா முழுவதும் பரவினர். வெட்டுக்கிளிகள் போல அவர்களை ஆசியாக் கண்டம் உருவாக்கிக் கொண்டு இருந்தது. மிக நீண்ட  காலத்திற்கு ஐரோப்பா ஆசியாவின் காலனி நிலமாகவே இருந்தது. இன்றைய ஐரோப்பியர்கள், அந்த ஆசிய மக்களின் வம்சாவளிதான்.

உலக வரைபடத்தில் ஆசியக் கண்டம் பரந்து விரிந்து கிடக்கிறது. அதனை ஒப்பிடும்போது ஐரோப்பா அளவில் மிகச் சிறியது. ஆனால் (நிலத்தின்) அளவை வைத்து ஒரு  மனிதனையோ அல்லது நாட்டையோ அளவிடுவது என்பது மிகத் தவறான முறை. இன்று, ஐரோப்பா அதன் புகழின் உச்சியில் இருக்கிறது. ஐரோப்பாவின் பல நாடுகள் மிகச் சிறந்த புகழ் பெற்ற அறிவியல் அறிஞர்களை உலகத்திற்கு அளித்து உள்ளது. அவர்களின் கண்டுபிடிப்புகள் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கின்றன.  ஐரோப்பாவின்  அறிஞர்கள், சிந்தனையாளர்கள், இசைவாணர்கள், எழுத்தாளர்கள், நுண்கலை வல்லுனர்களைப் புறக்கணித்துவிட்டு நாம் உலகத்தின் வரலாற்றைப் பேச முடியாது.

அதைப் போலவே நாம் ஆசியாவின் பங்களிப்பையும் மறுக்கமுடியாது. உலகை மாற்றி அமைத்த சிந்தனையாளர்கள் உலகிற்கு ஆசியக் கண்டத்தின் கொடை. இன்று உள்ள மதங்களில் மிகப் பழமையான ஹிந்துமதம் நமது பாரதநாட்டில் தோன்றியது. இன்று ஜப்பான், சைனா, திபேத், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் பின்பற்றப்படும் புத்தமதமும் இந்தியாவில் தோன்றியதுதான். யூத மதமும், கிருஸ்துவமும் ஆசியாவின் மேற்க்குக் கரையில் உள்ள  பாலஸ்தீனத்தில் தோன்றியவை. முகமது நபி அரேபியாவைச் சார்ந்தவர். பார்சிகள் மதமும் இன்றைய ஈரானில்தான் ஆரம்பமானது.

கிருஷ்ணன், கௌதம  புத்தர், மகாவீரர், இயேசு கிறிஸ்து, முகமது நபி, கன்பூசியஸ் என ஆசியாவில் தோன்றிய சிந்தனையாளர்களின் வரிசை மிக நீண்ட ஓன்று. இதைப் போலவே செயல்வீரர்கள் பலரும் ஆசியக் கண்டத்தில் தோன்றி இருக்கிறார்கள்.

காலம்தான் எப்படி மாறி இருக்கிறது. இப்போது அது நம் கண் முன்னாலே மாறிக்கொண்டு இருக்கிறது. பொதுவாக வரலாறு மெதுவாகவே நடை போடும். ஆனால் இன்றோ அது மிக விரைவாக மாற்றம் அடைகிறது.

தனது நீண்ட  உறக்கத்தில் இருந்து ஆசியா விழித்துக் கொண்டு விட்டது. உலகம் முழுவதும் ஆசியாவையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருக்கிறது. உலகத்திற்கான தனது பங்களிப்பை ஆசியா தரும் காலம் நெருங்கி விட்டது என்பதை உலகம் புரிந்து கொண்டு விட்டது. 

சனி, 27 செப்டம்பர், 2014

கொஞ்சம் அரசியல் பேசலாமா ?

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா இன்று குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப் பட்டார். நான்கு வருட சிறைத் தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

இனி என்ன நடக்கலாம் ?

அறுதிப் பெரும்பான்மை இருப்பதால் இப்போது உள்ள சட்டமன்றம் கலைக்கப் படாது என்று நான் நம்புகிறேன். வழக்கம் போல ஒரு புது முதல்வரை ஜெ கைகாட்டி, அவரை அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்வார்கள். கொள்கை அளவில் இதே ஆட்சி நீடிக்கும்.

ஆனால், நான்கு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அதன் பிறகு ஆறு ஆண்டு தேர்தலில் நிற்கத் தடை என்றால், நேரடி அரசியலில் ஜெ அடுத்த பத்து வருடத்தில் ஈடுபட முடியாது. அரசியலில் பத்து ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம். அத்தனை வருடம் கட்சியைத் தன் கட்டுப்பாடில் அவர் வைத்து இருக்க முடியும் என்று நான் நம்பவில்லை. இரண்டாம் கட்டத் தலைவர்கள் இல்லாத கட்சி காலப்போக்கில் காணமல் போகவே வாய்ப்பு இருக்கிறது.

நிச்சயமாக இந்தத் தீர்ப்பு திமுகவிற்கு ஒரு பெரும் வாய்ப்பை உருவாக்கி இருக்கிறது. தமிழகம் எங்கும் கிளை இயக்கங்கள், களத்திலும் இணையத்திலும் தீவிரமாக இயங்கக்கூடிய கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் சர்வ நிச்சயமான ஒரு வாக்கு வங்கி என இன்றைய நிலை திமுகவிற்கு சாதகமாகவே இருக்கிறது.

ஆனால், பல திமுக மாவட்டச் செயலாளர்கள், மற்றும் மந்திரிகள் மீது மக்களுக்கு உள்ள கோபம், தலைமையின் குடும்ப வாரிசு அரசியல், அதன் வழி பற்றி மாவட்டங்களில் உள்ள வாரிசு அரசியல் என்று நம்பிக்கை இழந்த ஒரு பெருங்கூட்டம் திமுகவிற்கு பாதகமாகவே இருக்கறது.

2G அலைக்கற்றை வழக்கும், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் மீது உள்ள வழக்குகளும் வேகம் பெற்று, ஒரு வேளை அந்தத் தீர்ப்புகள் திமுகவிற்கு பாதகமாக வந்தால், ஊழலைப் பற்றிய திமுகவின் பிரச்சாரம் மக்கள் மனதைக் கவருவது சங்கடமே.

2016 தேர்தலில் யார் முதல்வர் கலைங்கரா இல்லை ஸ்டாலினா என்ற விவாதம் தேர்தலில் எதிரொலிக்கும் என நான் நினைக்கிறேன்.

அதிமுகவின் வாக்கு வங்கி என்பது பெரும்பான்மையாக திமுகவின் எதிர்ப்பாளர்களால் கட்டமைக்கப் பட்டது. அதனை யார் கைப்பற்றுவார்கள் என்பது தான் இன்று பல கட்சிகளுக்கு முன் உள்ள கேள்வியாக இருக்கும். எம் ஜி யாரால் கட்டமைக்கப் பட்ட அந்த வாக்கு  எங்கே செல்லும், யார் அதனை அடைவார்கள் என்பதே இன்று பலர் முன் உள்ள வினா

காங்கிரஸ், பா ஜ க, கம்யூனிஸ்ட் என்ற தேசியக் கட்சிகள் இங்கே பயன் அடையப் போகிறார்களா இல்லை மதிமுக, பாமக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள என்று தமிழ்நாட்டில் சில இடங்களில் மட்டும் ஊடுருவி உள்ள கட்சிகள் வளர்ச்சி காணுமா என்பதை வருங்காலம் காட்டும்.

எது எப்படி இருந்தாலும், தமிழக அரசியல் களம் மிகப் பெரிய மாற்றத்தின் முன்னே இருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை


வெள்ளி, 26 செப்டம்பர், 2014

ஆழி பெரிதா





ஹிந்துத்வ இயக்கத்தினரால் சற்றே பயம் கலந்த மரியாதையுடனும், இடதுசாரி மற்றும் திராவிட இயக்கவாதிகளால் எரிச்சலுடனும் சுட்டப்படும் அரவிந்தன் நீலகண்டன் அவர்களால் தமிழ் பேப்பர் இணையதளத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்தியாவின் பண்டைய காலத்தின் சிந்தனைப் போக்கையும், காலம் காலமாக அது எழுப்பி வந்த கேள்விகளைப் பற்றியும் ஆராய்கிறது இந்த நூல்.

வடக்கே சிந்து நதி முதல் தெற்க்கே கடல் கொண்ட ( அல்லது கொண்டதாகக் நம்பப்படும் ) லெமுரியா வரை பரவி இருந்தது தமிழர் நாகரீகம், அதனை கைபர்  கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் அழித்து விட்டார்கள் எனவும் பரந்த இந்த நிலப்பரப்பு  ஒரே நாடாக ஒருநாளும் இருந்தது இல்லை என்றும், பண்பாட்டு ரீதியாக, கலாசார ரீதியாக வெவ்வேறு தேசிய இனங்கள் ஆங்கிலேயர் காலத்தில் ஒன்றாகக் கட்டமைக்கப்பட்டது இந்தியா என்ற தோற்றம் என்றும் பேசுபவர்களுக்கு, பண்பாட்டு ரீதியாக எப்படி ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிலப்பரப்பில் ஒரே தத்துவம் உயிர்ப்போடு இருக்கிறது என்று பதில் அளிக்கிறது இந்த நூல்.

ஒரே இறைவன் ஒரே இறைநூல் ஒரே மார்க்கம் என்ற தத்துவம் எதனாலோ இந்த மண்ணில் ஒருபோதும் வேர்விடவில்லை. உண்மையை அறிய பல்வேறு வழிகள் இருக்கலாம் என்ற பன்மைத்தன்மையை இந்த நாடு மீண்டும் மீண்டும் உரக்கக் கூறிக்கொண்டே இருக்கிறது.

இறை நம்பிக்கை மட்டும் அல்ல இறைமறுப்பும் இணைந்தே இங்கே வேர்விட்டு உள்ளது. படைப்புக்கு ஒரு முதல்வன் தேவையா ? படைப்பும் படைத்தவனும் வேறுவேறா அல்லது  ஓன்றுதானா ? படைத்தவன் முதல்பொருளா அல்லது காரணப் பொருளா ? படைப்பு என்பது அவனிடம் இருந்தே படைக்கப் பட்டதா இல்லை வேறு எதையோ வைத்து அவன் படைத்தானா என்ற விரிவான விவாதங்கள் இங்கே நடந்து இருக்கிறது.

"வேத ரிஷிகள் கேள்விகளைக் கேட்கத் தூண்டினார்கள். தங்கள் அனுபவங்களைச் சொன்னார்கள். என்றாலும் இறுதிவிடை உங்களிடமிருந்துதான் வரவேண்டும். கையேடு பாதையாகிவிடாது. அனுபவமே சத்தியம். வேதங்கள் அனுபவத்துக்கு கீழேதான். எனவே கேள்விகளை அவர்களே கேட்டார்கள்."

இப்படிக் கேட்ட கேள்விகளும் அதற்க்கு கிடைத்த கிடைத்த பதில்களும் தான் உபநிடதங்கள் எனத் தொகுக்கப் பட்டன. அதுபோலவே அரவிந்தன் இந்த நூலில் பலப் பல கேள்விகளை எழுப்பி அதற்க்கு விடை காண முயற்சி செய்கிறார்.

வேதத்தில் குறிக்கப்  படும் வேள்விகள் எதனைச் சுட்டுகின்றன, வேள்வி மேடைகளுக்கும் இன்றும் நமது வீடுகளில் வரையப்படும் கோலங்களுக்கும்  ஏதாவது தொடர்ப்பு இருக்கிறதா ?

இன்று போதை அளிக்கும் பானமாக காட்டப்படும் சோமம் என்ற பானம் உண்மையில் என்னவாக இருக்க முடியும் ?

அநேகமாக எல்லா இறைக் கோட்பாடுகளிலும் காட்டப் படும் பிரளயம் என்பது என்னவாக இருந்து இருக்கக் கூடும் ?

இன்றும் பல்வேறு மக்களின் நினைவில் வாழும் சரஸ்வதி நதி பற்றிய விவாதங்கள்

இந்திய நாகரீகத்தில் பெண் தெய்வங்கள் இருந்தனவா ? இருந்தால் அவர்கள் எந்த இடத்தைப் பெற்று இருந்தார்கள் ?

காலத்தையும் மனதைப் பற்றியும் வேத நூல்கள் என்ன கூறுகின்றன ?

பண்டைய நாகரீகத்தைச் சேர்ந்த மனிதர்களுக்கு கடல் பற்றிய ஞானம் இருந்ததா, கடலோடிகள் அந்த சமுதாயத்தில் இருந்தார்களா ?

வேத நூல்கள் காட்டும்  அறம் என்பது எவையெல்லாம் ? விவசாயம் பற்றி, உணவைப் பகிர்ந்து அளிப்பது பற்றிய சிந்தனை எப்படி உருவாகி வளர்ந்து வந்து இருக்கிறது

வேத நாகரீகத்தில் எந்த எந்த மிருகங்கள் குறிக்கப் படுகின்றன ? குறிப்பாக அந்தக் காலக் கட்டத்தில் குதிரை பயன்படுத்தப் பட்டதா

அஸ்வமேத யாகம் என்பது என்ன ? அது வளமையைக் குறிக்கும் சடங்கா அல்லது திராவிடவாதிகள் சொல்வது போல வெறும் பாலியல் ஆபாசமா ?

( இங்கே நினைவு கொள்ள வேண்டிய ஒரு முக்கிய அம்சம், இந்தக் கலாசாரத்தில் ஆண் பெண் உறவு என்பது பாவம் என்று ஒருபோதும் கருதப்படவில்லை என்பது )

ஆரிய என்ற சொல் எதனைச் சுட்டுகிறது ? ஒரு தனி இனத்தையா ? அல்லது குணத்தைக் குறிக்கவே அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டதா ?

தமிழர்கள் தனி இனம், அவர்களுக்கும் இந்தியப் பண்பாடு என்று குறிக்கப் படுவதற்கும் தொடர்ப்பு இல்லை என்ற கருத்து உண்மையா ?

புறநானூறும் மற்றைய சங்க இலக்கியங்களும் வேத நெறிகளைப் பற்றி, வேள்வி முதலான சடங்குகளைப் பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறதா ?

சதியைத் தடை செய்த ஆங்கிலேய அரசு, குழந்தைத் திருமணங்களை ஏன் தடை செய்ய விரும்பவில்லை ?


கேள்விகள் கேள்விகள், முடிவுறாது மீண்டும் மீண்டும் எழும்பும் கேள்விகள். இவற்றிக்கு மிகச் சிறந்த வழக்கறிஞர் போல வேத நூல்களில் இருந்தும், பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் தரும் விவரங்கள் மூலமும் தனது வாதத்தை முன்வைக்கிறார்.

நல்ல விவாதச் சூழலில், அரவிந்தனின் இந்தப் புத்தகத்தை முன்வைத்து எதிர் வாதங்களும், அதற்க்கான ஆதாரங்களும் அளிக்கப் பட்டு இருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்ட வசமாக இணையத்தில் இந்தத் தொடர் வெளியாகும் போது  இதற்கான எதிர்மறை வெறும் கூச்சலும், பழிச் சொல்லுமாகவே முடிந்து போய் விட்டது.

ஹிந்துத்வர்களும், அவர்களை மறுப்பவர்களும் கட்டாயம் படித்து விவாதிக்க வேண்டிய நூல் இது.

ஆழி பெரிதா என்பதை நான் அறியேன், ஆனால் அரவிந்தனது படிப்பும் உழைப்பும் மிகப் பெரிது. 

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

பிடித்த பத்து

எழுத்துக் கூட்டி தமிழ் வாசிக்க ஆரம்பித்த வயது முதல் இன்று வரை எனக்குப் பிடித்த பத்து புத்தகங்கள் இவை.

இதிகாச புராணம்

1. வியாசர் விருந்து - மூதறிஞர் ராஜாஜி அவர்கள் தமிழில் எழுதிய மகாபாரதம். ஒரு கதைக்குள் பல கதை, பல கதைக்கும் ஒரு விதை என்று ஆழ்ந்து அகன்று விளங்கும் பாரதக் கதையைப் புரிந்து கொள்ள, எந்த ஆரம்ப நிலை வாசகனுக்கும் கட்டாயமாக மிக உதவியாக இருக்கும் நூல். அநேகமாக வியாசர் காட்டும் எல்லாப் பாத்திரங்களையும் விடாமல் ராஜாஜி இந்த நூலில் காட்டி இருப்பார்.

2. காவ்ய ராமாயணம் -  டெல்ஹியை சேர்ந்த K S ஸ்ரீநிவாசன் என்பவர் எழுதிய புத்தகம் இது. இந்தியாவின் புகழ் வாய்ந்த ராமாயணங்கள் மூன்று. வடமொழியில் ஆதிகவி வால்மீகி எழுதியது, தமிழில் கம்பன் படைத்தது, ஹிந்தி மொழியில் துளசிதாசர் யாத்தது. இதில் வால்மீகி காட்டும் ராமன் உயர்குணங்கள் கொண்ட அரசகுமாரன், ஆனால் கம்பனும் துளசியும் காட்டும் ராமன் அவதார புருஷன். இந்த மூன்று நூல்களும் எங்கே எல்லாம் ஒத்துப் போகிறது, எங்கே எல்லாம் மாறுபடுகிறது என்பதை ஆசிரியர் மிக விவரமாகக் கூறி இருப்பார். பொதுவாக பல புத்தகங்களில் இல்லாத உத்தரகாண்டதையும் எழுதி இருப்பது இந்த நூலின் சிறப்பு.


தொழில், சுய முன்னேற்ற நூல்கள் 

3. Lee Iaccoca - An Autobiography - போர்ட் மோட்டார் கம்பனியின் முதல்மைச் செயல் நிர்வாகியாக இருந்தவரின் வாழ்க்கை வரலாறு. இத்தாலியைச் சேர்ந்த இவரை அந்த நிறுவனத்தின் உரிமையாளர் இரண்டாம் போர்ட் வேலையை விட்டு நீக்கி விடுகிறார். பின்னர் லீ அயகோகா நட்டத்தில் இயங்கிக் கொண்டு இருக்கும் க்ரைசெலர் மோட்டார் நிறுவனைத்தை லாபத்தில் மாற்றிய வரலாறு.

4. Seven Habits of Highly Effective People -  ஸ்டீபன் கோவே என்பவர் எழுதிய புத்தகம். மற்ற பல சுய முன்னேற்ற நூல்கள் எல்லாம் மேற்கத்திய சிந்தனை மரபில் இருக்கும் போது, அதற்க்கு மாறாக கீழ்த்திசைச் சிந்தனையை முன்னெடுக்கும் நூல் இது. பிறரை மாற்ற முயற்சி செய்வதற்கு முன்னர் நம்மை மாற்றும் வழிகளை விவரிக்கும் நூல் இது.

5. Tough Time doesn't last long, tough people do - ராபர்ட் ஷுல்லர் என்ற கிருஸ்துவப் பாதிரியார் எழுதிய நூல் இது. தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சந்திக்கும் போது துவண்டு விடாமல் அதனை எதிர்கொள்வது பற்றியும், தோல்வியில் இருந்து வெற்றிக்கு முன்னேறும் வழியையும் கூறும் நூல் இது.

வரலாறு 

6. Glimpses of World History -  பதின்ம வயதில் இருக்கும் தன் மகள் இந்திரா பிரியதரிசினிக்கு சிறையில் இருந்து ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. அநேகமாக உலக வரலாற்றையும், கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தில் இருந்த இந்தியாவையும் அறிந்து கொள்ள ஒரு சிறந்த நூல்.

7. சத்திய சோதனை - காந்திஜி அவர்களின் சுய சரிதை. அநேகமாக தான் உண்மை என்று நினைத்ததை, மறைக்காமல் சொன்ன மிகச் சில நூல்களில் இதுவும் ஓன்று.

8. May it please your honor - இதனை நூலாகக் கருத முடியுமா என்ற கேள்விக்கு என்னிடம் விடை இல்லை. காந்தி கொலை வழக்கில் நாதுராம் கோட்சே நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம். மகாத்மா என்று கொண்டாடிய ஒரு மனிதனின் முன்னின்று கைத்துப்பாக்கியால் சுட வேண்டிய அவசியம் எது என்று கோட்சேயின் கூற்று.

தமிழ் மொழிப் படைப்புகள் 

9. சுஜாதாவின் படைப்புகள் - சுஜாதா படிப்பாளியா, இலக்கியவாதியா என்ற கேள்விக்குள் போகாமல், ஒரு காலகட்டத்தில் பல மக்களைப் படிக்க தூண்டியவர் என்ற நிலையிலும், பல்வேறு விசயங்கள் பற்றி ஒரு கோடு காட்டிப் படிக்கத் தூண்டியவர் என்ற முறையிலும் இந்தப் பரிந்துரை.

10. பாரதியார் கவிதைகள் - இவனுக்கு முன்னால் உள்ள தமிழ் இலக்கியங்கள் எல்லாம் இவனோடே முடிவடைந்து, இவனுக்குப் பின்னால் உள்ள தமிழ் இலக்கியங்கள் எல்லாம் இவனிடம்  ஆரம்பிக்கிறது என்ற பெருமை பெற்ற யுகசந்திக் கவிஞன். மொழியின் வீச்சைக் கற்க பாரதியை விடச் சிறந்த ஆசானை நான் படிக்கவில்லை இதுவரை.  

செவ்வாய், 22 ஜூலை, 2014

Letter from a dying dad

Tom Attwater a businessman from Sutton Coldfield is too young to die at the age of 31. He has been diagnosed with terminal brain tumor and the doctors are of the opinion that he will not survive more than three years.

This is the letter he has written to his step daughter Kelli, who is also suffering from cancer. Reproduced from the magazine"Friday", dt 13.06.2014.

Darling Kelli, 

I am so sorry I will not get to see you grow up as I so want to. Please don't blame people or the world for this. A lot of life is simply luck and mine is running out. 

I wish I had the words to make you feel better. I wish I didn't have cancer and you didn't have to see me in pain as you often do now. I wish so many things were different but they are not. 

Most dads and daughters have decades to chat around the kitchen table, their hands warmed by mugs of coffee, as the dad dishes out advice and their girls do doubt roll their eyes. We don't have that time. I won't be able to drop you off on your first day at big school, pick you up after your first date, hold you when your heart hurts or cheer when you graduate. 

But while your old dad is still around I thought I'd try to give you some life advice in one go. I hope it gives you some comfort. I hope cancer never returns so that your life is long, fulfilled and happy. 

SCHOOL 
Everyone will say it's vital to work hard at school. Hopefully you'll always do your best. I did well at school, but did it do me much good in life? Not really. School work is important, but make sure you have fun too. 

BOYS
At the moment you don't make much distinction between girls and boys and see all children as friends. That's typical of your sweet nature. But Kel, that will change as you get older. You might see them as stinky, pesky classmates in a few year's time. But, probably at secondary school, you'll realize they can be quite nice. 

You'll have boyfriends when you'are older - much older hopefully ! - and I won't be there to grill them about their intentions. So here's some advice from your old man. It's very hard to describe how it feels to really be in love. You might remember seeing me and your mum laughing together and cuddling on the sofa, and once the love hearts and flowers fade that's what real love love like. Have fun finding it. 

Always choose boys with gentlemanly values, manners and respect. Imagine them having tea and a chat with our family around our table and if you thing they'll fit in, you have found a decent young man. 

Sadly, you will have your heart broken one day. It hurts and will feel like the end of the world. But you will get over it. And even if a romance does't work out, try to be kind. Boys have feelings too. 

Lastly, if you have a special boy pal who is always there for you when boyfriends come and go, don't take him for granted. Don't overlook him. He might really care for you. 

MARRIAGES 
I often dreamt about your wedding day and imagined filling up with tears as I walked you down the aisle before giving you away. I won't be able to do that Kelli. Sorry sweetheart,. But I will be looking over your shoulder on that day, proud and happy you have found a special someone to love you and care for you. 

I wonder if you will play what you call "the family song" ( which is really I'll Be There by Jackson 5). It meant so much to me and my brother and sister growing up, I know it does to you too. I'll e there on your wedding day in spirit. 

MUMMY 
You and your mum will argue at times, especially you you're a teenager. Please remember she adores you and wants the best for you.Give Mummy a hug when she is feeling sad and help each other get through any horrible times when I am gone. 

When you're a teenager you might think your friends are right and your mum is wrong. But she has to make hard decisions for you and more than any friend you'll ever have, has your interest at heart. Treat her well. 

FAMILY
Nothing is more important than family and the values they give us. Nothing. 

FRIENDS
Treat people as they treat you. Be nice to anyone who helps you, always. Bullying is horrible - never become one. 

CHRISTMAS & BIRTHDAYS 
On your first Christmas without me, I'd love if you and Mummy would light a candle and remember me for a few minutes. It would be great if you two did the monkey dance together. Jumping around shaking our bottoms always made us laugh. That's something to make me smile from above. I'd also love if you visit my parents on Boxing Day. They will be hurting too. 

I've given Nanny Sue presents for all your birthdays. I wish I could be there to see you open them. Hopefully you will like everything as it's hard to imagine you at 10,15,20. I wonder if you'll still like One Direction. I wounder if they'll still make you dance around the living room. 

CAREER
You were two when you told me you wanted to be a "princess astronaut" so you could wear nice dresses and find new planets. You might now realize that's not possible. But so many things are possible for you, darling. Do what makes you happy and what you enjoy. If you do so, life suddenly becomes much, much easier. 

You may need to start a few different careers to find the one you enjoy, but so be it. One life, one chance. 

MANNERS 
Always remember your please and thank-yous. The reason Mummy and I drum manners into you is because they will help you throughout your life. Always be courteous, especially to elders. Never put a knife in your mouth. Remember to write thank-you letters for gifts of kindness as it is always nice to act with grace and gratitude. 

LEARN TO DRIVE
Most dads teach their daughters to drive and usually fall out in the process. Make sure you learn how to drive as soon as you can - it opens up the world for you. Also, make sure Mummy doesn't teach you (just joking, Joely) 

TRAVEL ABROAD 
It's a cliche to say travel broadens the mind, but it's true. See as much of the world as you can. But never on a motorbike (too dangerous)

BE HAPPY 
You never laugh at 50%, you always laugh at 100%. Your laugh takes over your whole body and it is highly infectious. I hope you never lose that. There is no point in asking you not to be sad when I go. I know you will be, princess. And I wish I could be there to wrap my arms around you and snuggle you until you smile again. Remember the Eeyore teddy I bought you from a charity shop ? You said you'd keep him safe and cuddle him when you miss me. That's a great idea. You can feel sad and use it as a driving force throughout your life. Or you can just be sad. You know which one I hope you chose.

BE CHARITABLE 
Please give to charities. Charities have been good to you and me. You'll probably always remember our trip to Disneyland. But I'll never forget the sacrifices people made to pay for your healthcare if ever cancer returns. Elderly people send prayer cards and $10 notes they couldn't afford. Heads were shaved, miles were run, thousands were raised. All for you. It's important to pay back. Doing good deeds uplifts the soul. Never forget there are people worse off than you, who you can help. 

Remember your life motto "Always keep trying". You might remember that I taught you say "giving up for losers". I failed a number of times in my life but never give up, Kelli never give up.

BELIEVE IN YOURSELF 
In life many people will say you cannot do things. You make up your mind. Can you ? Do you want to ? Big challenges involve risks, so make smart choices. Those who told me I couldn't do certain things didn't want me to do them. If you want something, it is nearly always possible, so do your best. I'm sure there's a hell of a lot you can achieve !

I know you will make me proud and do something great in my memory. I know you can do it - so let's start now.

And finally.... Thank you for being you, Kelli. Thank you for paying me the biggest compliment of all times by calling me Daddy. Having you as my daughter is the greatest honor of my life. Thank you for teaching me more about love and happiness than any other person.

Enjoy your life. Don't rush through it. I will be waiting.

All my love, always to you, princess, and to Mummy.

Daddy  

வெள்ளி, 18 ஜூலை, 2014

படித்ததில் பிடித்தது

என்னை மதவாதி என்றே பல நண்பர்கள் நினைப்பது உண்டு. உண்மையில் நான் ஒரு தாமதவாதி. ஏறத்தாழ பதினெட்டு மாதங்களுக்கு முன்னால் படித்த புத்தகம் இது. புத்தக வெளியீட்டு விழாவில்  கலந்து கொண்டு  அன்று இரவே படித்த புத்தகம் இது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இணையத்தில்  இயங்கிக் கொண்டு இருப்பவர் நண்பர் திருப்பூர் ஜோதிஜி அவர்கள். ஒரு பட்டதாரியாக திருப்பூரில் காலடி எடுத்து வைத்தது, இன்று பெரிய நிறுவனம் ஒன்றில் பொது மேலாளராக வளர்ச்சி அடைந்த அவரது வாழ்க்கையையும், அத்தோடு திருப்பூர் நகரம் கடந்த இருபது ஆண்டுகளில் கண்ட வளர்ச்சியையும், அந்த வளர்ச்சிக்கு அது தந்த விலையையும் இணைத்து எழுதிய புத்தகம் டாலர் நகரம்.

புத்தக விமர்சனமாக இல்லாமல், இந்தப் புத்தகத்தில் நான் கண்டு கொண்ட மேலாண்மைப் பாடங்களையும், வாழ்க்கைப் பாடங்களையும் இங்கே தொகுத்து உள்ளேன்.

இனி வருபவை நண்பர் ஜோதிஜி அவர்களின் எண்ணங்கள்.

                 -------------------- --------------- ----------------------------

காலம் சில நாடகங்களை நடத்தும். முடிவில் சில பாடங்கள் கிடைக்கும்.
கற்றுக் கொண்டவர்கள் கவனமாக முன்னேறி அடுத்த படியில் ஏறி விடுவர். 
ஒவ்வொரு சூழ்நிலையும் ஒவ்வொரு பாடத்தை நமக்கு வழங்கிக் கொண்டேதான் இருக்கிறது. 

பதவி என்பது பெரிய விஷயம் இல்லை. ஆனால் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். திறமை என்பது முக்கியமில்லை. தந்திரமும் சமயோஜிதமும் தான் முக்கியமாகத் தேவைப் படுகிறது. எதை எங்கே பேசவேண்டும் ? எப்படிச் சூழ்நிலையைச் சமாளிக்கவேண்டும், முதுகுக்குப் பின் நடக்கும் துரோகங்களை எப்படி இனம் காண வேண்டும் என்பதே முக்கியமாக ஆகி விட்டது. 

அனுபவக் கல்வியே பல பேருக்கு நல்ல பொருளாதார வாழ்கையை அறிமுகம் செய்து தருகிறது. பணம் சேர்த்த பலர் மெத்தப் படித்தவர்களும் அல்ல, எந்த மேலாண்மைப் பள்ளிகளில் கற்றவர்களும் அல்ல. தொடர்ச்சியான உழைப்பு, சாமர்த்தியமான திட்டங்கள், உறக்கம் மறந்த செயல்பாடுகள்,  தொழிலுக்காகவே தங்களை அர்ப்பணித்த வாழ்க்கை. இந்த குணாதியங்கள் தான் பலரைத் தொழில் அதிபர்களாக வளர்த்து உள்ளது. நாம் வெற்றியாளனா இல்லை வெற்றி பெற்றவர்களைப் பார்த்து புழுங்கிக் கொண்டு இருப்பவனா ? இரண்டே கேள்விகள் தான் இங்கு. 

வெற்றி என்பது உழைப்பின் மூலமே வருவது என்பதைப் பலர் வாழ்கையின் மூலம் நாம் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். பல நிஜ வாழ்க்கைச் சூத்திரங்களையும் இவர்கள் வாழ்கையின் மூலம் நம்மால் கற்றுக் கொள்ள முடியும். எதைச் செய்யவேண்டும், எப்போது செய்யவேண்டும், எப்படிச் செய்யவேண்டும் - இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் தெரிந்தால் வெற்றி உறுதி.

எது  நம்மால் முடியாது என்று தெரிகிறதோ, அதில் நுழையாமல் இருந்தாலே நம்முடைய தொழிலில் வெற்றி உறுதி ஆகிவிடும்.

வெற்றி பெற்ற நிறுவனங்கள் அனைத்தும் தெளிவான நிர்வாக வடிவமைப்பில் உருவாக்கப் பட்டு இருக்கும். ஒவ்வொரு நிறுவனங்களிலும் மேல்மட்டம் முதல் அடிப்படைத் தொழிலாளர்கள் வரை குறிப்பிடத்தக்க நிர்வாக ஒழுங்கு இருக்கும்.

 இது போன்ற நிறுவங்கள், பணிபுரிபவர்களின் அனுபவத்திற்கும் கல்வித் தகுதிக்கும் மதிப்பளிக்கும்.அரைகுறையான ஞானம் பெற்றவர்கள் இங்கே ஜல்லி அடிக்க முடியாது. இது போன்ற நிறுவனங்கள் உள்ளூர் விற்பனை முதல் உலகளாவிய வியாபாரம் வரை, சரியான திட்டமிடுதலுடன் வணிகம் செய்து கொண்டு இருப்பார்கள். 

அறிவுரை என்பதே இரண்டு பக்க ஆயுதம் போலத் தான். சில சமயம் தரித்துக் கொண்டவனையே அது தாக்கி விடும். பல நேரங்களில் பலரைத் திருத்தும் அவசியம் நமக்கில்லை. திருந்தும் நிலையிலும் பலர் இருப்பது இல்லை. 

உழைப்பவர்களிடம் சுய கௌரவம் இயல்பான ஓன்று. 

வாழ்க்கை எப்போதும் போல உருளும் வரையில் இயல்பாக உருண்டு கொண்டே இருக்கும். பிரச்னை தொடங்கி விட்டால் நம்மையும் உருட்டித் தள்ளி விடும், 

மனிதனின் மனமென்பது அடுத்த போராட்டதிற்கு தயாராக இருக்கும்போது, அவர்கள் உடல் எதையும் ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் படைத்ததாக ஆகி விடுகிறது. நாம் வாழ வேண்டிய வாழ்க்கையை அதன் போக்கிலேயே பழகிவிட்டால் கட்டாந்தரை கூட பஞ்சு மெத்தை போலவே மாறிவிடும்.

அடித்தட்டு வர்க்கமோ, நடுத்தர வர்க்கமோ எவராக இருந்தாலும் தங்களை நம்பி  வாழ்பவர்களுக்காகவே தங்களின் வாழ்கையை வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறார்கள்.

அளவான வருமானம் அமையப் பெற்ற அத்தனை பேர்களும், ஆயுள் முழுக்க ஒருவிதமான அடிமைகள் தான்.

எத்தனை காரணங்கள் தத்துவங்கள் சொன்னாலும், இந்த வாழ்க்கை என்பதை மனைவிக்காக, மகனுக்காக, மகளுக்காக, பெற்றோருக்காக என்று ஒவ்வொருவரும் வாழ்ந்துதான் தொலைக்க வேண்டி இருக்கிறது.

நல்லவர்கள் போல வேஷம் போட்ட தலைவர்கள் நாட்டை ஆள, வேஷம் போட்டவர்கள், தத்துவம் பேச மௌன சாட்சியாய் நாம் அனைத்தையும் கடந்துதான் செல்ல வேண்டி இருக்கிறது.

உண்ண இலவசம், உடுக்க இலவசம், உறங்க இலவசம் என்று சொல்லி வருபவர்கள் கல்லூரிப் படிப்பு வரை இலவசம் என்று சொல்லவே மாட்டார்கள். இந்திய சரித்திரத்தில் மதுவை ஊற்றிக் கொடுப்பவர்களைக் காவல் காக்கும் பெருமை நம் தலைவர்களுக்தான் சேரும். காரணம் சரியான முறையில் யோசிக்கக் கற்றுக் கொண்டால், சரியான முறையில் கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்பதைப் புரியாதவர்களா இவர்கள். 

ஒவ்வொரு தொழில் நகரத்திற்கும் வெவ்வேறு முகமுண்டு. பணம் அதிகமாகப் புழங்கும் நகரங்களில் மனித மனதைத் தேடுவது அறியாமை. 

இரண்டு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் என்பதில் மனிதாபிமானம் என்பது தேடிப் பார்த்தாலும்  கிடைக்காது என்பது போல, தொழிலிலும் அதுவே நடக்கிறது. ஒருவர் வெற்றி பெற்ற பிறகு எத்தனை கதைகள் கட்டுரைகள் வேண்டும் என்றாலும் சொல்லலாம் / எழுதலாம். பலர் நடந்து வந்த பாதையைப் பார்த்தல் அதெல்லாம் ராஜதந்திரம் என்பதற்குள் முடிந்து விடும். பணம் என்பது விரும்புவர்களை விட வெறியாக உள்ளவர்களிடம் தான் வந்து சேரும்.

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையைச் சரியான முறையில் வாழத் தெரியாவிட்டால், ஒரு தலைமுறைக்குத்தான் பிரச்னை. ஒரு நிறுவனம் சரியான முறையில் இயங்காவிட்டால்  சமுதாயத்தின் பிரச்சனையாக மாறி விடுகிறது. 

இந்தியா என்ற மரத்தில் ஏறி நின்று கொண்டு   கிளைகளைச் சிலர் வெட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.பலர் மரத்தின் வேர்ப் பகுதியில் சுடுதண்ணீர் ஊற்றிக் கொண்டு இருக்கிறார்கள். கட்டளைகளைப் பிறப்பிப்பது எல்லோரும் ஆக்ஸ்போர்ட், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக மேதைகள்.

ஏற்றுமதி செய்தால் அன்னியச் செலவாணி இருப்பு அதிகரிக்கும் என்பது போல, உள்நாட்டில் வேலைவாய்ப்பு குறைந்தால் அதனால் பலர் குற்றங்களில் ஈடுபடுவர் என்பது எப்போது இந்த மேதைகளுக்குப் புரியும் ? 

நம் தலைவர்கள் மக்களுக்காக என்று புதிதாக எந்தத் திட்டங்களையும் இங்கு கொண்டு வரத் தேவை இல்லை. இந்தியாவின் உள்ள இருக்கும் அடிப்படை வளத்தை இவர்களின் சுயலாபதிற்க்காக ஏற்றுமதி செய்யாமல் இருந்தாலே போதும். இயல்பாகவே இந்தியா வல்லரசு ஆகி விடும். 

மேலை நாட்டினர் இந்திய அரசியல்வாதிகளின் மரபணுக்களை ஆராய்ச்சி செய்து பார்க்கலாம். எந்த மூலக் கூற்றில் பணவெறி இருக்கிறதோ அதை மட்டுமாவது நீக்க முடியுமா என்று பார்க்கலாம்.

உலகத்தில் அமேரிக்காவால் பாதிக்கப் படாத நாடே இல்லை. அப்படி ஒரு நாடு இருக்குமானால் அந்த நாட்டில் அமெரிக்காவிற்குத் தேவைப்படும் எந்த அடிப்படை வளமும் இல்லை என்று அர்த்தம். 

அப்பனும் பாட்டனும் கற்றுக் கொடுத்த இயற்க்கை விவசாய உணவு முறையை இன்று வெளிநாட்டுக்காரன் நமக்குக் கற்றுக் கொடுக்கிறான். நாமும் அவர்கள் விரும்பும் இயற்கை உரத்தைப் போட்டு உருவாக்கப் பட்ட பொருள்கள் என்று அவர்கள் விருப்பப்படி நடந்து கொண்டு ஏற்றுமதி செய்யவேண்டிய நிலையில் இருக்கிறோம். 

வளர்ந்து கொண்டு இருக்கும் நாடுகளில் வாழ்பவர்களின் வாழ்க்கை முழுவதும் உரமாக மாறிவிட, வளர்ந்த நாடுகள் விளைச்சலை அட்டகாசமாக அறுவடை செய்து கொண்டு இருக்கிறார்கள். 

அமெரிக்காவின் சர்வதேச அரசியல் கொள்கைகளும் அங்குல தொழில் அதிபர்களின் கொள்கைகளும் வெவ்வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. பன்னாட்டு நிறுவனங்கள் அடிப்பது ஒரு கல்லில் இரண்டு மாங்காய் இல்லை, ஒரு மரமே சாய்ந்து விடும். 

இங்கே  குழந்தைகளின்  ஒழுக்கம் பற்றி யாருமே பேசுவது இல்லை. தலை இல்லாத முண்டமாகத்தான் நமது குழந்தைகளை வளர்க்கப் போகிறோமா ? நமது குடும்பச் சூழ்நிலைகள் அவர்களுக்குப் புரிய வைத்து இருக்கிறோமா ? அவர்களின் விருப்பு வெறுப்புக்களை நாம் புரிந்து வைத்துக் கொண்டு இருக்கிறோமா ?

இதனைப் போட்டி நிரம்பிய உலகத்தில் ஒழுக்கமாக வளர்ந்த பிள்ளைகள் மட்டுமே நம் அருகே  இருந்து கவனிக்க முயற்சி செய்வார்கள். இல்லையென்றால் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளை கணினி மூலம் மட்டுமே கண்டு  கொள்ள முடியும்.

 பணம் முக்கியம், பணத்தைச் சம்பாதிக்க படிப்பு முக்கியம், போட்டியில் முந்திவர மொழி அறிவு மிக முக்கியம். இதை  எல்லாவற்றையும் விட சுப்பையாவின் மகனாக, முனியாண்டியின் மகளாக அவரவரின் குடும்பப் பாரம்பரிய பெருமையும் முக்கியம் அல்லவா ? நம் நாட்டிக்கு விசுவாசமான ஒரு நல்ல குடிமகனாக அவர்களை வளர்க்க வேண்டாமா ?

                   -------------------  ----------------------  ---------------------

ஜோதிஜி அவர்களின் எண்ணங்களில் என்னைக் கவர்ந்தவை இவை. உங்களுக்கும் பிடித்து இருக்கும் என நம்புகிறேன்

புதன், 16 ஏப்ரல், 2014

என்ன செய்ய வேண்டும் புதிய அரசு ?

இந்திய ஜனநாயக சக்கரம் மறுபடி சுழல ஆரம்பித்து உள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் மக்கள் தங்கள் தலைவிதியை நிர்ணயம் செய்யப் போகிறார்கள். தங்களைத் தாங்களே அறிவாளிகள் என்றும் அறிவுஜீவிகள் என்றும் எண்ணிக் கொண்டு இருக்கும் பெரிய மனிதர்கள் போல் அல்லாது, தங்கள் விருப்பம் என்ன என்பதை மிகத் தெளிவாக மக்கள் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார்கள். என்ன மிகப் பெரும் கூச்சலைக் கிளப்பி, அவர்கள் சொல்வததைக் கேட்காமல் அறிவாளிகள் தங்கள் அறிவின் பெருமையை மீண்டும் மீண்டும் வெளிச்சம் போட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

தேர்தலின் முடிவு எப்படி இருந்தாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும் எந்த மாறுதலும் வரப் போவது இல்லை, ஆளுபவர்கள் மாறலாம், ஆனால் அவர்கள் கடைப் பிடிக்கும் கொள்கை மாறப் போவது இல்லை, மக்களுக்கு எந்த முன்னேற்றமும் வரப்போவது இல்லை என்று சொல்லும் புரட்சி வீரர்கள் ஒருபுறம், எங்களைத் தேர்வு செய்யுங்கள் நாட்டில் எங்கும் பாலாறும் தேனாறும் பெருகி ஓடும் என்று கனவை விற்பனை செய்யும் அரசியல்வாதிகள் ஒருபுறம்., இவர்களுக்கு நடுவே ஒரு மிகச் சாதாரண மனிதனாக எனது ஆட்சியாளர்கள் என்ன செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன் என்பதனைப் பற்றியே இங்கே பேசப் போகிறேன்.

கல்வி மட்டுமே ஒரு குடும்பத்தை, அதன் மூலமாக சமுதாயத்தை முன்னேற்றம் அடையச் செய்யும் என்று நான் உளமார நம்புகிறேன். அறிவு அற்றம் காக்கும் கருவி. குறைந்த பட்சம் உயர்நிலைக் கல்வி வரை, தரமாக இலவசமாக அனைவருக்கும் கிடைக்கப் பட வேண்டும். ஏற்க்கனவே இப்படித்தானே இருக்கிறது என்று கேள்வி வரலாம், அரசு கல்வி, புத்தககங்கள், பேருந்து வசதி, உணவு எல்லாவற்றையும் இலவசமாகத் தருகிறதே என்றும் வினா வரலாம்.

தருகிறது, ஆனால் ஏன் மக்கள் தனியார் கல்வி நிறுவனங்களை நாடுகிறார்கள் ? ஏன் அரசுப் பள்ளிகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை ? ஏன் அரசு ஆசிரியர்களும், அரசுப் பணியாளர்களும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள் ?

பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை தேர்தலில் போட்டி இட விரும்பும் அனைவரும் தங்கள் பிள்ளைகளை/ பேரக் குழந்தைகளை அரசுப் பள்ளியில் தான் சேர்த்து இருக்க வேண்டும் என்பதைச் சட்டமாக்க வேண்டும். இது அவர்களின் தனி மனித சுதந்திரத்தை மறுப்பது என்று ஆகாது, எந்த மக்களுக்கு சேவை செய்யப் போகிறோம் என்று சொல்கிறார்களோ அவர்களுக்கு அருகில் இருப்பதாகத் தான் ஆகும்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் மகளோ, ஒரு சட்ட மன்ற உறுப்பினரின் பேரனோ படிக்கும் அரசுப் பள்ளியின் தரம் தானாகவே உயர்ந்து விடும். அங்கே உள்கட்டமைப்பு பலப்படுத்தப் படும், ஆசிரியர்களின் கவனிப்பு கூடும், பொது மக்களின் தேர்வும் அதுவே என மாறும்.

இரண்டாவது மருத்துவ வசதி, இந்தியா முழுவதும் குறைந்த கட்டணத்தில், தரமான அரசு மருத்துவ மனைகள் நிறுவப் பட வேண்டும். அதற்க்கான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உபகரணங்கள் இவை அனைத்தும் அனைவரும் எளிதில் அணுகக் கூடிய நிலை வர வேண்டும்.

உள்கட்டமைப்பு வசதிகள் பலப் படுத்தப் படவேண்டும், நல்ல சாலை, தடையற்ற மின்சாரம், பணம் குடுத்து வாங்க வேண்டிய அளவில் இல்லாத குடிதண்ணீர் இவை தான் ஒரு சாதாரண மனிதன் விரும்புவது.

உணவுப் பொருள்கள் வீணாகிப் போகும் அவலம் நம் நாட்டில் தான் மிக அதிகமாக உள்ளது. இந்த நிலை மாற, தாலுகா அளவில் குளிர்சாதனக் கிட்டங்கிகளும், உணவைப் பதப் படுத்தும் வசதிகளும் செய்து தரப் பட வேண்டும்.

அதிவேக புகைவண்டிகளும், விண்ணை எட்டும் கட்டிடங்களும் ஒரு புறம் இருக்கட்டும், ஆனால் இந்தக் குறைந்த பட்ச தேவைகளை நிறைவு செய்தால் போதும், என் நாட்டு மக்கள் அவர்களைத் தாங்களே கவனித்துக் கொள்வார்கள். வெட்டிப் பேச்சையும், வீர வசனங்களையும் அல்ல, உங்களிடம் இருந்து அவர்கள் செயலைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

இதனைச் செய்தால் எங்கள் மக்கள் உங்களைத் தலை மேல் வைத்துக் கொண்டாடுவார்கள், நீங்கள் செய்யவில்லை என்றால், உங்களை மாற்றவும் மக்களுக்குத் தெரியும். மாபெரும் தலைவர்களை அவர்கள் மண்ணோடு மண்ணாக ஆக்கி காட்டி இருக்கிறார்கள்.

பாடம் படிக்கத் தயாரா தலைவர்களே நீங்கள் ?   

வெள்ளி, 28 மார்ச், 2014

கடவுள் - கற்பிதமா, கற்பனையா ?


பல்லாயிரம் ஆணடுகளுக்கு முன்னால் மனித இனம் குரங்கு இனத்தில் இருந்து பிரிய ஆரம்பித்தது. வளைந்த இருந்த முதுகுத் தண்டு நிமிர மனிதன் நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தான். ஆனால் அப்போது அவன் முன்னால் ஒரு பெரும் சவால் காத்து இருந்தது.

மனிதனுக்கு புலியைப் போலவோ, சிங்கத்தைப் போலவோ வலுவான் உடல் அமைப்பு இல்லை, மானைப் போல அவனால் விரைவாக ஓட முடியவில்லை. இந்தக் குறைகளை சமன் செய்ய அவன் ஆயுதங்களைச் செய்து கொள்ளத் தொடங்கினான், கூடி வாழத் தொடங்கினான். சமுதாய முறை என்பது உருவானது.

ஆனால் மனிதன் மிருகங்களிடம் இருந்தே பாடம் படித்துக் கொண்டு இருந்தான். மிருக உலகில் வலிமையானதே பிழைக்கும். வேட்டை ஆடிய உணவை வலிமை மிகுந்த மிருகம் உண்ட பின்னே மற்றவைகள் உண்ண முடியும்.

அதனால் தான் Lion's Share ( சிங்கத்தின் பங்கு) என்ற சொல்லாட்சியே உள்ளது. பெண் சிங்கம் வேட்டையாடிக் கொண்டு வந்ததை ஆண் சிங்கம் உண்ட பின் தான் பெண் சிங்கத்திற்கும் குட்டிகளுக்கும் கிடைக்கும்.

யானைக் கூட்டத்தில் மட்டும் இது மாறுபடும். யானைகள் பயணம் செய்யும் போது, நீரோ அல்லது உணவோ கிடைத்தால் முதலில் கரு உற்ற பிடிகள், பின் மற்ற பெண்யானைகள், பின் முடிய யானைகள், அதன் பிறகு இளைய வயதில் உள்ள யானைகள், எல்லாம் உண்டு முடித்த பின்னர் தலைமைப் பொறுப்பில் இருக்கும் யானை உண்ணும்.

கூட்டு வாழ்க்கைக்கு, சமுதாய வாழ்க்கைக்கு மனிதன் தயாராகும் போது, பிறரைக் காக்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு வந்து சேர்ந்தது. வலிமை குறைந்தவர்களை, காயம் அடைந்தவர்களை, முதியவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை மற்றவர்கள் சுமக்க வேண்டி வந்தது.

தனது சுகங்களைக் குறைத்துக் கொண்டு அல்லது பின்னிறுத்தி, பிறர் வாழ நினைக்கும், செய்யும் செயல்கள் அறம் எனப் பேசப் படத் தொடங்கின. இதனைச் சரிவர செய்பவர்களை பரிசுகள் வழங்கிக்கும், தவறுபவர்களுக்கு தண்டனை தரும் வழக்கமும் ஆரம்பமாகியது.

பரிசுகளை விரும்பியோ அல்லது தண்டனைக்கு அஞ்சியோ இந்த முறையில் வாழ மனிதர்கள் ஆரம்பித்தார்கள். குழுக்கள் ஒன்றாகி, காலமாற்றத்தில் அரசு முறைகள் உருவாக ஆரம்பித்தன.

எது சரி, எது தவறு என்று வரையறை செய்யும் மனிதர்கள், இந்த ஒழுங்கைக் மக்கள் கடைபிடிக்கிறார்களா என்று கண்காணிக்கும் அதிகாரிகள், தவறு நடந்தது என்று தெரிந்தால் அதற்க்கான தண்டனையை வழங்கும் ஆட்கள் என்று சமுதாயம் விரிவாகத் தொடங்கியது. இதுதான் நாம் இப்போது படிக்கும் நாகரீகத்தின் தொடக்கமாக இருக்க முடியும்.

ஆனால் மனித மனம் மிக விசித்திரமானது, அது மீண்டும் மீண்டும் தன்னலனையே நாடுவது, பிறர் அறியாமல் தவறு செய்தால் என்ன என்ன கேள்வியை அது கேட்க ஆரம்பித்தது. எல்லார் பின்னாலும் காவலுக்கு ஆள் வைக்க முடியுமா என்ன ? இந்தக் காவலனே தவறு செய்தால் என்ன செய்ய என்ற பிரச்னை சமுதாயத்தின் முன் எழுந்தது.

இதனைச் சரி செய்ய ஆண்டவன் என்ற சித்தாந்தம் பதிலானது. எல்லாம் தெரிந்தவன், எங்கும் இருப்பவன், காலங்களைக் கடந்தவன், எல்லோர் செய்யும் செயல்களையும் சாட்சி மாத்திரமாக பார்ப்பவன் ஒருவன் இருக்கிறன், அவனிடம் எதையும் மறைக்க முடியாது என்று பேச்சு ஆரம்பமானது.

இது ஒரு பார்வை.

படைக்கப் பட்ட ஒரு பொருள் இருக்கும் என்றால் அதனைப் படைத்தவன் ஒருவன் இருந்தே தீர வேண்டும். மேசை இருக்கிறது என்றால் அதனைச் செய்த தச்சன் ஒருவன் இருக்க வேண்டும், ஆடை இருக்கிறது என்றால் அதனை நெய்த நெசவாளி ஒருவன் இருக்க வேண்டும், அது போல ஒரு ஒழுங்கின் மீது உலகம் இயங்குகிறது என்றால் அதனை உருவாகிய ஒருவன் இருக்கத்தான் வேண்டும் என்பது மற்றொரு பார்வை.

ஏதாவது ஓன்று உருவாக வேண்டும் என்றால் அதற்கான காரணப் பொருள் ஓன்று இருக்கத் தான் வேண்டும், காரணம் இல்லாமல் காரியம் இல்லை. பெருவெடிப்பின் மூலமாக உலகம் தோன்றியது என்றால் அதன் முன் என்ன இருந்தது, ஏன் அந்த வெடிப்பு நடந்தது என்ற கேள்விகளுக்கு இதுவரை விடை இல்லை.

எதோ ஒரு ஒழுங்கில் உலகம் நடக்கிறது என்றால் அது எப்படி சமன் செய்யப் பட்டது, இதற்கெல்லாம் ஒரு மூல காரணப் பொருள் ஓன்று இல்லாமல் நடக்கவே முடியாது. அதுவே இறைவன் என்று மற்றொரு பார்வை பேசுகிறது.

விடை காண முடியாத பல கேள்விகள் இன்னும் நம் முன்னால் இருக்கின்றன - நமது அறிவை கேலிக்குறியாகும் கேள்விகள். இதற்க்கு பதில் அளிக்க முடியவில்லை என்பதால் தான் வள்ளுவன் கூட


                    அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
                    கேடும் நினைக்கப் படும். 

இதற்க்கு உரை எழுதும் பரிமேலழகர் கோட்டத்தினைப் பொருந்தியவனைப் பொருந்திய மனத்தை உடையவனது ஆக்கமும்;ஏனைச் செம்மையுடையவனது கேடும் உளவாயின் அவை ஆராயப்படும்

 உரை விளக்கம்
'கோட்டம்', ஈண்டு அழுக்காறு. 'உளவாயின்' என்பது எஞ்சி நின்றது. ஆக்கக் கேடுகள் கோட்டமும் செம்மையும் ஏதுவாக வருதல் கூடாமையின், அறிவுடையரால் இதற்கு ஏதுவாகிய பழவினை யாது என்று ஆராயப்படுதலின், 'நினைக்கப்படும்' என்றார். "இம்மைச் செய்தன் யானறி நல்வினை, உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்தித், திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது" (சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை,வரிகள்: 91-93)என நினைக்கப்பட்டவாறு அறிக.

பதில் சொல்ல முடியாத கேள்வி என்பதால் தான் முன்வினைப் பயன், பூர்வ ஜன்ம கர்மா, விதிப் பயன் என்ற பதில்கள் மேலெழும்பின.

விவாதிப்போம், அடுத்த பதிவுகளில் - ஆண்டவன் அருளோடு









வெள்ளி, 31 ஜனவரி, 2014

In search of the truth – Part II


The second claim of Mr Narain’s is on the Foreign Direct Investments.

I have used the tabulation provided by my learned friend only.



As per his duality theory of convenience, my learned friend has used the % growth to add value to his comment.

But the fact is for the same given period of time 2008-2009 to 2011-2012 period,

F DI Inflow in USD millions
Gujarat
5358
Tamilnadu
5272
Andra Predesh
4551

I am at a loss to understand how he projects Andra Predesh over Gujarat.
In his earliest postings he has argued that the investments made by Reliance in Gujarat has not added any value to the common man of Gujarat, then I do not know how the FDIs made on any other states will add value to the common man of that particular state.

At the same time, the p-sec intellects of the country blame Modi for bringing FDIs at the same time praised the other chief ministers for the same FDIs in their states, a good approach indeed.


State wise Gross Domestic Product by Industry – posting by Narain on 28th Jan 2014 and the 

My friend comfortably compares Bihar with Gujarat here, and that too using % growth formula.
Using his own statement, a student who has scored 40% can improve his performance by 150% but a student who has scored 90% can only grow maximum by 11.1%.

From 203, 373 crores in 2004-2005 Gujarat has grown to 398,884 crores in 2011-2012.
In the same time Bihar has grown from 77,781 crores to 246,995 crores.

No doubt it is an impressive growth, but still Bihar has a long way to travel to catch up with other developed states. By sheer size Gujarat is 50% more than Bihar. 

Also we need to understand that it becomes much tougher to retain your position once you grow beyond a point. 

But what my learned friend has missed is how much % of claim shall we give to BJP for the development of Bihar, as they were the major coalition partners to Mr Nitish Kumar?

Or as usual, shall we give all credits to the new found darling and put all blames on BJP? The choice is yours!


We should congratulate and motivate Bihar for a fine work of growing, we can benchmark Bihar against Gujarat but is it fair to compare the two ?

Look at the figures given by my frien on Industry, Manufacturing and services and decide yourself.
Now the most important point of % of people below the poverty line

% of population below poverty line

All India
21.80%
Bihar
40.90%
Gujarat
12.50%
Tamilnadu
17.80%

Can we now declare Bihar has not achieved anything in improving the standard of living of its people and comment that Tamilnadu lags behind Gujarat in eradicating poverty?

Growth of Agriculture

All India
3.69%
Bihar
16.09%
Gujarat
7.22%
Tamilnadu
4.11%

Using this data, shall we proclaim that Tamilnadu has not cared for his agriculturists?

Sorry, I do not believe in jumping into such conclusions, if we really care for the nation and its people, we should come forward to meaningful discussions and not try to use our intellects to twist the facts and figures.

May serenity prevails all over; let us try to understand the big picture without any preconceived notions.

There have been hundreds of meaningful question my friend could have raised, but unfortunately he has not looked the data in a critical views. As a trainer, I think that now I should prepare a training program of " The Art of Questioning". 

One think what surprises me is even people who claim themselves to be highly educated, never taken the pain of reading a post, understand and discuss it, rather they simply hit the like button, share it and praises the author. 

Beware my friends, a community which can not think on his feel will time and again fell on the floor. 

Let me thank my good friend, but for his postings I might not have taken pain to search for the data and write such a long posting.


Thank you Narain ! 

PS : This may not be the end of the series, it all depends upon my friends's claims and counter claims. 



In search of Truth

My good friend Narin has started a debate in Face book and thrown a lot of data and trying to prove that the Modi factor is just a myth. I am not sure whether I can use the word debate here; because what he is trying to prove is his preconceived notion that the Modi factor is just an inflated balloon and taking the pain of puncturing it with his arguments.

This is my attempt to analyse what Mr. Narain has told and try to find out the truth behind the statements.

Before politics and data crunching, let us have a bit of Physics.

In quantum theory it is said that the light travels as waves as well as particles of energy and one cannot exactly fix up the velocity and the position at the same time. This is known as Heisenberg theory of Uncertainty. Refusing this Albert Einstein has made a famous comment God does not play dice with universe”.

What Narain is trying to do is playing the dice very intelligently; he uses absolute numbers in some comparisons and percentage calculations in other areas. Certain areas he benchmarks Gujarat against Tamilnadu and in certain areas he benchmarks Gujarat against Bihar.

I believe that, the correct way is to compare apples to apples and oranges to oranges and not apples to oranges. Fortunately, I am not such an intellect who can twist the facts to suit my own convenience.

Before we actually go into the posting, let me make something very clear.

1.   I whole heatedly bow down to the unsung, unheard common people of India who have made all achievement possible. By their sheer dedication, devotion, determination and call of duty is moving the wheel of economy of this nation and big salute to them.

2.   No way, I am trying to degrade the developments of any state by comparing it with another, and I wish and pray that all states should flourish and all my county men and women should have a comfortable and peaceful life.

3.    Most importantly, I have no requirement of keeping the flag of Gujarat high and degrading my own state of Tamilnadu.



Mr Narain has started with the power supply situation of Gujarat. His arguments were

1.   1. The claim of 24 hours of uninterrupted power supply is nothing but a lie.

2.   2.Gujarat has a weekly power /shutdown one day in every week for industries.

3.   3. Gujarat supply power to the national grid in the morning when the requirement is high at high cost and buy back electricity in the night from the national grid when the requirement is low at a cheaper cost.

4.    4. So Gujarat government forces the agriculturist to use electricity for irrigation purposes in the night only.

5.    5. Gujarat has different cables to deliver high tension current and low tension currents, which is a high cost affair, which was rejected by the central controlling authorities.

6.     6. Out of one crore and twenty one lacs plus households, more than eleven lacs of household do not have electricity.

7.    7. When people of the state do not afford, power what is the fun in selling powers to other states. 

Now let us look into these questions, and try to find out the answers.

1.   1. Unfortunately for the first question, there was no data provided by him, except for loud talks. My question of the duration of power supply or power shut down was not answered. The current state of affair of Tamilnadu, in electricity situation, the lesser said is better.

2.    2. Regarding the power shut down, another learned electrical engineer who is working in a Power Generation and Distribution Company says that it is very common and basic requirement for the upkeepment of machines and electrical lines. As we come from a state where there is no electric power for at least twelve hours a day, I hope we do not need such maintenance works. My questions in this points were a) Whether it is a scheduled power shut down or an unscheduled power shut down and if there has been an unscheduled power shut down then what is the frequency and duration. This question was also unanswered.

3.    3. We all know the relationship between demand and supply and if one is able to use it to his advantage, then we need to learn from him, nothing more nothing less.

4.     4.Usage of power to irrigate agricultural fields was also answered by people from the same field. Then explained that the evaporation of water during the day time will be more than of the evening and night time and even Tamilnadu Agriculture Department advices the farmers to irrigate the fields in the night time only. As usual no answers from my learned friend.

5.    5. Different feeders for low tension and high tension cables, was also countered by the same electrical engineer with technical data. No answers as usual.

6.     To draw this conclusion, he has used the Union Government’s data. Good work, but what he has informed is half truths. The real data looks like this

Households main source of lighting
Total No
Electricity
%
Bihar
18,940,629
3,098,435
16.36
Gujarat
12,181,718
11,013,214
90.41
Tamilnadu
18,493,003
17,265,059
93.36







This data shows the number of houses that uses electricity as the main source of lighting. Our friend has calculated the difference and assumed that the houses which does not use electricity as the mail source of energy to have no electrical connection at all and claim that eleven lacs sixty eight thousand five hundred and four houses do not have electricity at all. 

Using the same yardsticks, twelve lacs twenty seven thousand nine hundred and forty four houses do not have electricity in Tamilnadu.

If we look at the data of Bihar, more than one crore and fifty eight lacs houses do not have electricity.

Now you can calculate which number is on the high side and take your decision.

But please do not put the blame on this performance on the heads of BJP which was a major coalition partner in Bihar for a long period with Mr Nithish Kumar.

The following data shows the number of houses has no lighting at all.
Household with no lighting at all
Total No
No Lighting
%
Bihar
18,940,629
15,040
0.079406
Gujarat
12,181,718
116,903
0.959659
Tamilnadu
18,493,003
81,962
0.443205







Fantastic job done by all three states. Kudos to all.

Just for information, this list gives you an idea of houses that uses Solar as the main energy source. Seems we have a long way to go in non conventional energy sources.
Useage of Solar Energy as main source
Total No
Solar Power
%
Bihar
18,940,629
109,389
0.577536
Gujarat
12,181,718
16,016
0.131476
Tamilnadu
18,493,003
13,669
0.073914


If we don’t know how to express what we know in numbers, then we know little about it.
When we know little about anything, then we leave things to chance and not to choice.



Watch this space for some more interesting info.

Connected Links

Census data which was the base of the argument.