புதன், 17 ஜூன், 2020

வீர வாஞ்சியின் பலிதான நாள் - ஜூன் 17


ஆங்கிலேய அதிகாரத்தை எதிர்த்து ஸ்வதேசி கப்பல் கம்பெனியை நடத்தி, தூத்துக்குடியில் கோரல் மில் தொழிலாளிகளுக்காக வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர் வ உ சி அவர்கள். அவரையும், சுப்ரமணிய சிவாவையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி, அவர்கள் இருவருக்கும் சிறை தண்டனை பெற்றுக் கொடுத்தது ஆங்கில அரசு.

வஉசி கைதானபின்பு அவரது கப்பல் கம்பெனியை இல்லாமல் ஆக்க முழு மூச்சாய் செயல்பட்டவன் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ். அந்தக் கொடுமையை கண்டு சகிக்காமல் நீலகண்ட ப்ரம்மச்சாரியின் தோழர்கள் ஆஷை கொலை செய்ய முடிவு செய்கின்றனர். அதன் படி ஆஷை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக்கொன்று தன்னையும் சுட்டுக் கொன்றவர் வாஞ்சி நாதன். அநேகமாக அனைவருக்கும் தெரிந்த வரலாறுதான் இது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நகர்ப்புற நஸ்சல் கூட்டங்களும், இந்தியாவை உடைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்யும் சில வெளிநாட்டு புல்லுருவிகளும் புதிய கதை ஒன்றை உருவாக்குகின்றனர். இதற்கு பின்புலமாக நிற்பது பாளையங்கோட்டையில் உள்ள புனித சவேரியார் கல்லூரி நிர்வாகம்.

இவர்கள் எழுதும் கதையின் படி ஆஷ் குற்றாலத்து அருவிகளில் எல்லா ஜாதிகளும் குளிக்கலாம் என்று ஆணை பிறப்பித்ததாகவும், பிரசவ வலியால் துடித்துக்கொண்டு இருந்த பட்டியல் இனப் பெண்ணை செங்கோட்டை நகர அக்கிரகாரத்தில் வழியே அழைத்துச் சென்றதாகவும் அதனால் கோபமடைந்த பிராமணர்கள் ஆஷை கொன்றுவிட்டார்கள் என்றும் ஆஷ் எதோ ஒரு புரட்சி நாயகன் என்றும் சித்தரித்து வருகிறார்கள்.

முதலில் திருநெல்வேலி கலெக்டர் அதிகாரம் செங்கோட்டை நகரில் செல்லாது, அது திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகையில் இருந்த பகுதி, அது போக செங்கோட்டை அக்கிரகாரத்தின் வழியே சென்றால் ஆற்றங்கரைக்குத்தான் செல்ல முடியுமே அன்றி, மருத்துவமனைக்கு அந்த வழி இட்டுச் செல்லாது.

ஆஷ் கொலை நடந்தது 1911ஆம் ஆண்டு. அதன் பிறகு 1930களில் காந்தி திருநெல்வேலிக்கு வருகிறார். நெல்லையில் சாவடி பிள்ளை என்பவரின் வீட்டில் தங்குகிறார். அப்போது கூட எல்லா சமுதாய மக்களும் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை என்பதால் அவரும் குற்றால அருவிகளில் குளிக்க மறுத்து விடுகிறார்.

சூரியனே அஸ்தமிக்காத ஆங்கில அரசின் ஏகபோக பிரதிநிதியான மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவை இல்லாமல் ஆக்கும் அளவுக்கா திருநெல்வேலியில் உள்ள மக்கள் அதிகாரத்தோடு இருந்தனர் ? மிக சமீப காலத்தில் நடந்த நிகழ்வையே திரித்து கூறும் இவர்கள், இன்னும் எந்த எந்த பொய்களை நம்மீது சுமத்தி உள்ளார்கள் என்பதை கண்டறிந்து உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டு வர வேண்டும்.

கால் வாய்த்த இடங்களில் எல்லாம் பார்த்த மக்களை கொன்று, அவர்களை அடிமைகளாக மாற்றி, அடிமை வியாபாரத்தை உலகெங்கும் பரப்பி, அவர்களின்மதங்களை, கலாச்சாரத்தை அழித்து வெறியாட்டம் ஆடிய கிருத்துவத்தின் கோர முகத்தை வெளிக்கொண்டு வருவது நமது கடமையாக இருக்க வேண்டும்.