பாரத திரையிசை வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக எழுபதாண்டுகளாக கோலோச்சிவரும் லதா மங்கேஷ்கர் அவர்களின் தொண்ணூறாவது பிறந்தநாள் இன்று.
தனது ஐந்தாம் வயதில் இருந்தே தந்தையிடம் இசைப்பயிற்சியைத் தொடங்கிய லதா மங்கேஷ்கர், பின்னர் அமான் அலிகான் சாஹிப் மற்றும் அமநாத்கான் ஆகியோரிடமும் பயின்றார். 1942ஆம் ஆண்டு அவரின் தந்தை மரணமடைய, குடும்ப நண்பரான விநாயக் தாமோதர் கர்நாடக்கி என்பவர் மங்கேஷ்கர் குடும்பத்திற்கு உதவி செய்து வந்தார். அவர்தான் லதா மங்கேஷ்கரை திரைத்துறையில் அறிமுகம் செய்துவைத்தார். 1942ஆம் ஆண்டு மராத்திய திரைப்படம் ஒன்றில் லதா தனது முதல் பாடலைப் பாடினார். ஆனால் அந்தப் பாடல் திரையில் இடம்பெறவில்லை.
1942ஆம் ஆண்டு வெளியான மராத்தி திரைப்படம் ஒன்றில் சிறு வேடத்தில் நடித்தார், அதே படத்தில் அவர் பாடிய பாடல்தான் திரையில் வெளியான அவரின் முதல் பாடல். அன்று தொடங்கிய இசைப்பயணம் எழுபதாண்டுகளாக வெற்றிப்பயணமாக அமைந்தது. அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷன், நௌஷத், எஸ் டி பர்மன், சலீம் சவுத்ரி, கல்யாணிஜி ஆனந்த்ஜி, அனு மாலிக், இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான் என்று இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களின் இசையில் பல்லாயிரம் பாடல்களை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார்.
1958 ஆம் ஆண்டு சலீம் சவுத்ரி இசையமைத்து வெளிவந்த “மதுமதி” என்ற திரைப்படத்தில், இவர் பாடிய “ஆஜா ரெ பரதேசி” என்ற பாடல், இவருக்கு முதல் ஃபிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது. பிறகு, 1961 ல் ஹேமந்த் குமார் இசையமைத்த “பீஸ் சால் பாத்” திரைப்படத்தில் “கஹின் தீப் ஜலே கஹின் தில்” என்ற பாடல் இவருக்கு இரண்டாவது ஃபிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது. 1973 ஆம் ஆண்டு,
ஆர்.டி பர்மன் இசையமைத்து வெளிவந்த “பரிஜாய்” என்ற திரைப்படதில் இவர் பாடிய “பீதி நா பிட்டை” என்ற பாடல் சிறந்த பின்னனி பாடகருக்கான முதல் “தேசிய விருதை” பெற்றுத்தந்தது.
1961 ல் பஜனை பாடல்கள் அடங்கிய “அல்லாஹ் தேரா நாம்” மற்றும் “பிரபு தேரா நாம்” என்ற இரண்டு ஆல்பத்தை வெளியிட்டார். 1974ல் ‘மீராபாய்” பஜன்ஸ்’, ‘சான்வரே ரங் ராச்சி’, மற்றும் ‘உத் ஜா ரெ காக’, 2007ல் “சாத்கி” என்ற ஆல்பத்தையும், 2012 ஆம் ஆண்டு அவருடைய சொந்த பெயரில் (எல்.எம்) ஒரு இசை ஆல்பத்தையும் வெளியிட்டார்.
லதா அவர்கள், 1970 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் திரைப்படம் சாராத சில ஆல்பங்களையும் வெளியிட்டார். காலிப் கஜல், மராத்திய நாட்டுப்புற இசையில் ஒரு ஆல்பமும், சாந் துக்காராம் பற்றிய “அபாங்க்ஸ்” என்ற ஆல்பமும் இதில் அடங்கும்.
ஒரு பின்னணி பாடகராக மட்டுமல்லாமல், இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கியுள்ளார். 1953 ஆம் ஆண்டு “வாடல்” என்ற மராத்தி மொழித் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார். பிறகு, அதே ஆண்டு சி. ராமச்சந்திராவுன் இணைந்து ‘ஜஹாஞ்ச்கார்’, ‘காஞ்சன்’ (1955) மற்றும் ‘லேகின்’ (1990) என்ற இந்தித் திரைப்படத்தையும் வெளியிட்டார். மகராஷ்டிர மாநில அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை “சதி மனசே” என்ற திரைப்படத்திற்காகவும், “ஐராநிச்ய தேவா துலா” என்ற பாடலுக்காக சிறந்த பாடகர் விருதையும் பெற்றார். 1960ல் “ராம் ராம் பவ்ஹான” என்ற திரைப்படத்தின் மூலம் இசையாமைப்பாளராக கால்பதித்த அவர், 1963ல் ‘மராத்தா டிட்டுகா மேல்வாவ’ மற்றும் ‘மொஹித்யஞ்சி மஞ்சுளா’, ‘சதி மானசே’ (1965), ‘தம்படி மதி’ (1969) போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
1999 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட லதா மங்கேஷ்கர், 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்தனா விருது” மத்திய அரசால் வழங்கி கெளரவிக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டு மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையினை புனேவில் நிறுவினார்.
முழு நேர பாடகியாக கலைத்துறைக்கு தன்னை அர்ப்பணம் செய்துகொண்ட லதா மங்கேஷ்கர், திருமணம் செய்துகொள்ளவில்லை. பாடகி ஆஷா போஸ்லே இவரது சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா, திரையுலகின் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே, 3 தேசிய விருதுகள், 6 பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் இப்படி பல விருதுகளை, அங்கிகாரங்களை தனதாக்கியவர் லதா மங்கேஸ்கர்.
இசைக்குயில் லதா மங்கேஷ்கருக்கு ஒரே இந்தியா தளம் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.