செவ்வாய், 19 மே, 2020

முதல் சுதந்திரப் போரின் நாயகன் நானா சாஹேப் - மே 19

வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி சிறிது சிறிதாக பாரதம் நாட்டின் பெரும்பகுதியை தங்கள் ஆளுமைக்கு கொண்டுவந்தனர். அந்நிய ஆட்சியை வேரோடு அகற்றி சுதந்திரத்தை மீண்டும் பிரகடனம் செய்யும் முகமாக உருவான முதல் சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான கதாநாயகன் நானா சாஹேபின் பிறந்தநாள் இன்று. 


மூன்றாவது மராட்டியப் போரில் ( 1817 - 1818 ) மராட்டியர்களைத் தோற்கடித்து அவர்களிடம் இருந்து பாரத நாட்டின் பெரும்பான்மையான பகுதியின் ஆட்சியாளர்களாக ஆங்கிலேயர்கள் உருவானார்கள். மராட்டியப் படை முற்றிலும் உருக்குலைந்து இருந்தது. அடுத்த நாற்பது வருடங்களில் தங்கள் நடவடிக்கைள் மூலம் அதுவரை முக்கிய சக்தியாக விளங்கிய மராட்டியர்கள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்தனர். மராட்டியப் பகுதியில் இருந்து பேஷ்வா இரண்டாம் பாஜிராவை கான்பூர் நகருக்கு அருகில் உள்ள பிதூர் பகுதியில் வசிக்குமாறு கம்பெனி. .வாரிசு இல்லாத பேஷ்வா நாராயண் பட் - கங்காபாய் தம்பதியரின் மகனான நானா கோவிந்த் டோண்டு பந்த் என்ற இளைஞரை தத்து எடுத்துக்கொண்டார். 

1818-ல் நடைபெற்ற மூன்றாம் ஆங்கிலோ-மராட்டா போரின் தொடர்ந்த நடைபெற்றது தான் 1857 போர். இந்த இடைப்பட்ட காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவின் பொருளாதாரத்தை முற்றிலும் சிதைத்திருந்தது. பல்வேறு குடிசைத் தொழில்களும், சிறு தொழிற்சாலைகளும் அழிக்கப்பட்டன. மக்கள் பெரும் வரிவிதிப்பிற்கு உள்ளாயினர். மறைமுக மதமாற்றம் மிக தீவிரமாக நடைபெற்றது. குறிப்பாக கிறித்துவ மதத்திற்கு மாறுவதன் மூலம் பெரும் வரிவிதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணம் மக்களிடையே வேகமாக பரப்பப்பட்டது. கோயில் சார்ந்த குடியிருப்புகளும், தொழில்களும் பெரும் வன்முறைக்கு இலக்காயின. பிரிட்டிஷ் அரசாங்கத்தில் வேலை பார்த்த இந்தியர்கள் பலரும் “சுபேதார்” என்ற பணிநிலைக்கு மேல் உயர்த்தப்படவில்லை. வாரிசு இல்லாத மன்னர்களின் அரசை எந்த தர்ம நியாயமும் இல்லாமல் ஆங்கில ஆட்சி அபகரித்துக் கொண்டது. பேஷ்வாவின் வாரிசான நானா சாஹேபை ஆங்கில ஆட்சி அங்கீகரிக்க மறுத்துவிட்டது. 

மொகலாய மன்னர்களின் வரிசையில் கடைசியானவரான பகதூர் ஷா-2  தனது 62-வது வயதில் 1837-ஆம் ஆண்டு தான் ஆட்சிக் கட்டிலில் அமர முடிந்தது. அவரது தந்தையான 2-வது அக்பர் ஷா 1837-ல் இறந்தபோது, மூத்த மகன் உயிரோடு இல்லை என்பதால், 2-வது மகனான பகதூர் ஷா-2 ஆட்சியில் அமர ஆங்கிலேய ஆட்சி  ஒப்புதல் கொடுத்தது.

இந்தியாவின் பெரும்பாலான ராஜ்ஜியங்கள் ஏற்கெனவே ஆங்கிலேயர் வசம் வந்திருந்தன. பகதூர் ஷாவிற்கு ஆங்கிலேயர் பென்ஷன் கொடுத்து விட்டு, ராஜ்ஜியத்தின் நிர்வாகத்தை தங்கள் வசம் எடுத்துக் கொண்டு விட்டனர். ஒரு சிறு பகுதியில் மட்டும் பெயருக்கு வசூல் பண்ணிக்கொள்ளவும், தனது சொந்த பாதுகாப்பிற்கென ஒரு சிறுபடையை வைத்துக் கொள்ளவும் பகதூர் ஷாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. எல்லாப் பகுதிகளிலும் இருந்த அழுத்தம் பெரும் போராட்டமாக வெடித்தது. பசுவின் கொழுப்பும் பன்றியின் கொழுப்பும் இணைந்து துப்பாக்கி குண்டை உபயோகம் செய்யவேண்டி உள்ளது என்ற வதந்தி இந்த எரிமலையை பற்ற வைத்தது. 

நானா சாஹேபின் சிறு வயது நண்பர்களான தாந்தியா தோபே, ஜான்சியின் மகாராணியாக இருந்த லக்ஷ்மிபாய், அஸிமுல்லா கான் ஆகியோர் இந்த சுதந்திரப் போராட்டத்தை பல்வேறு இடங்களில் முன்னெடுத்தனர். முதல் இந்திய சுதந்திரப் போர் 29 மார்ச், 1857 அன்று துவங்கியது. மங்கள் பாண்டேயின் புரட்சியுடன் இது தொடங்கியது. இதை தொடர்ந்த அடுத்த சில மாதங்களில், புரட்சியாளர்கள் தொடர் வெற்றிகளை அடைந்தனர். அதே வருடம் மே மாதம் 10-ஆம் தேதியன்று தில்லி பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து விடுவிக்கப்பட்டது. 

தில்லியை தொடர்ந்து கான்பூர், லக்னொ, குவாலியர் மற்றும் பாண்டா ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன. அதே வருடம் ஜூன் மாதம், 4, 5, மற்றும் 6 ஆகிய தேதிகளில், அசம்கர், வாரணாசி மற்றும் அலகாபாத் ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன. ஜூன் 11 அன்று, ஃபைசாபாத், தைராபாத்/பாராபங்கி, சலன், சுல்தான்பூர் மற்றும் கோண்டா ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன. இதே சமயத்தில், மத்திய இந்தியா, ஜான்சி, நெளகான், குருசராய், பண்பூர  மற்றும் ஓராய் ஆகிய பகுதிகள் பிரிட்டிஷ் படைகளுடன் போர் நடந்தது. இந்தப் போரில் பிரிட்டிஷ் படைகள் பெரும் பின்னடைவை சந்தித்தனர். 27 ஜூனன்று கான்பூர், ஜூலை 5 லக்னொ ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன. 

பகதூர் ஷா ஜபரின்(Bahadur Shah Zafar) தலைமையில் 15 ஆகஸ்டு 1857-அன்று ஒரு இந்திய அரசாங்கம் அமைக்கப்பட்டது. இந்த அரசாங்கம் மே 1858 வரை தொடர்ந்து செயல்பட்டது. கான்பூரில் இருந்த கிழக்கிந்திய ராணுவத்தின் படையை சுதந்திரப் வீரர்களோடு நானா சாஹேப் முற்றுகை இட்டார். ஆங்கிலத் தளபதி வீலர் நானா சாஹேபிடம் சரணடைந்தார். மீண்டும் ஆங்கிலப் படை கான்பூரைத் தாக்கி அதனை தங்கள் வசம் கொண்டுவந்தனர். 

இந்தப் போரில் இந்தியர்கள் ஈட்டிய வெற்றியில் கிராமங்களுக்கு பெரும் பங்குண்டு. புரட்சிப் படைக்குத் தேவையான உணவை இந்த கிராமங்கள் போதுமானளவு அளித்துவந்தன. இதை அறிந்த பிரிட்டிஷார் பல்வேறு கிராமங்களை தரைமட்டமாக்கினர். கிராமத்து மனிதர்களை அவர்கள் பூமியிலிருந்து விரட்டினர். குறிப்பாக தற்கால டாக்கா தொடங்கி பேஷாவர்(பாகிஸ்தான்) வரையிலான நீண்ட “நெடுஞ்சாலை”யில்(Grand Trunk Road) இருந்த கிராமங்கள் அனைத்தும் சின்னாபின்னமாயின. இதனால் இந்தியப் படையின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த இடங்கள் அவர்களின் அதிகார எல்லையில் இருந்து நழுவின. இதை நன்கு உபயோகப்படுத்திக் கொண்ட பிரிட்டிஷ் அரசு இந்தியப் படை மீதான தாக்குதலுக்கு வசதியாக தங்கள் படைகளை இந்த இடங்களில் நிறுவியது. தங்கள் படைகளுக்கு தேவையான அனைத்தையும் கொண்டு செல்ல இந்த பெரும் “நெடுஞ்சாலை” அவர்களுக்கு பெரிதும் உதவியது. தாங்கள் கைப்பற்றிய இடங்களிலிருந்து பிரிட்டிஷ் படை இந்தியப் படை மீது தாக்குதலை துவங்கியது. இழந்த அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற பிரிட்டிஷ் படை மிக மூர்க்கமான தாக்குதலை நடத்தியது. இப்படி ஒரு மூர்க்கத்தனத்தை எதிர்பார்த்திராத இந்தியப் படை பெரும் இழப்பை சந்தித்தது. கொல்கத்தா முதல் கான்பூர் வரை இடங்களை கைப்பற்றியபடி முன்னேறிய பிரிட்டிஷ் படையினரின் மூர்க்கமான தாக்குதலில் லட்சக்கணக்கான இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். 

கான்பூர் ஆங்கிலேயர்கள் வசமானதைத் தொடர்ந்து நானா சாஹேப் நேபாளத்திற்கு தப்பிச் சென்றார். மீண்டும் ஒருமுறை கான்பூர் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். ஆனால் அதுவும் வெற்றிகரமாக முடியவில்லை. 

புரட்சிக் களத்தில் ஒவ்வொரு மாவீரரும் வரிசையாக களப்பலி ஆனார்கள்.  ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் வஞ்சகமாகக் கொல்லப்பட்டார். குமாரசிம்மன் உயிரிழந்தார். மெளல்வி அகமதுஷா நண்பன் என கருதிய ஒரு இந்திய சிப்பாயால் சுட்டுக் கொல்லப்பட்டார். பகதூர் ஷா நாடுகடத்தப்பட்டார். தாந்தியா தோபே கைது செய்யப்பட்டு தூக்கில் இடப்பட்டார். நேபாளத்திலும் இமயமலைக் காடுகளிலும் ஒளிந்து வாழ்ந்த நானா சாஹேப் மரணமடைந்து விட்டதாக ஆங்கில அரசு அறிவித்தது.  ஆனால் 1906 அல்லது 1907ஆம் ஆண்டில் நானா சாஹேப் மஹாகவி பாரதியைச் சந்தித்ததாக பாரதியின் நண்பர்கள் பதிவு செய்துள்ளார்கள் 

ஆனாலும் நானா சாஹேப் போன்ற தியாகிகளின் பலிதானம் வீணாகவில்லை. அவர்கள் காலடியில் இருந்து இன்னும் ஆயிரம் ஆயிரம் தேசபக்தர்கள் தோன்றினார்கள். தொடர்ந்த போராட்டத்தின் இறுதியில் பாரதம் முதல் சுதந்திரப் போருக்குப் பிறகு தொன்னூறு ஆண்டுகள் கழித்து சுதந்திரம் அடைந்தது. இன்று நாம் சுதந்திரமாக இருக்க தங்கள் வாழ்வைத் தியாகம் செய்த வீரர்கள் அனைவருக்கும் நமது வணக்கங்களும் நன்றிகளும் உரித்தாகுக.   

நாதுராம் கோட்ஸே - பிறந்தநாள் மே 19


நாதுராம் கோட்ஸேவின் இயற்பெயர் ராமச்சந்திர கோட்ஸே. ஆங்கிலேய ஆட்சியில் தபால் துறையில் பணியாற்றிவந்த விநாயக கோட்ஸே - லக்ஷ்மி தம்பதியினரின் மகன் இவர். இவருக்கு முன் பிறந்த மூன்று ஆண் குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்துவிட்டதால், இவர் பெற்றோர் இவரின் சிறுவயதில் பெண் குழந்தையைப் போல வளர்த்தனர். இவரின் சகோதர் பிறந்த பிறகே இவருக்கு ஆண் உடைகளை அணிவித்தனர். ஒரு பெண்ணைப் போல இவருக்கு முக்குத்தி அணிவித்து இருந்ததால் இவரை நாதுராம் ( முக்குத்தி அணிந்த ராமன் ) என்று அழைத்தனர். அந்தப் பெயராலேயே அவர் தனது வாழ்நாள் எல்லாம் அறியப்பட்டார்.

ஆர் எஸ் எஸ் மற்றும் ஹிந்து மஹாசபா இயக்கங்களோடு தொடர்பில் இருந்த நாதுராம் அக்ரிணி என்ற மராத்திய மொழி பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தார். 1940ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ் மற்றும் ஹிந்து மஹாசபா ஆகிய இயக்கங்கள் மீது அதிருப்தி அடைந்து ஹிந்து ராஷ்ட்ரதள் என்ற அமைப்பை உருவாக்கினார். இதற்கிடையே ஹைதராபாதில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைத்தண்டனை அனுபவித்தார்.

நாடு சுதந்திரத்தை நோக்கி சென்றுகொண்டு இருந்தது. நாட்டைப் பிரிப்பது என்பது தடுக்கமுடியாத செயலாக ஆகிக்கொண்டு இருந்தது. நேரடி நடவடிக்கை நாள் என்ற பெயரில் கலவரத்திற்கு ஜின்னா நேரடி அழைப்பு விடுத்தார். கல்கத்தா நகரம் பற்றி எரிந்தது. " நாங்கள் போரை விரும்பவில்லை. ஓன்று நாட்டைப் பிரிக்கவும், அல்லது நாடு என்பதே இல்லாமல் ஆக்கிவிடுவோம்" என்று ஜின்னா அறைகூவல் விடுத்தார்.
வங்காளத்தின் அன்றய முதல்வர் சுஹ்ரவாதி காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட, 1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் நாள் வங்காள ஹிந்துக்களுக்கு கருப்பு தினமாக விடிந்தது. ஏழாயிரத்தில் இருந்த பத்தாயிரம் வரை இறந்தவர்கள் எண்ணிக்கை இருக்குமென்று கூறப்படுகிறது. மத ரீதியில் நாட்டைப் பிரிப்பதைத்தவிர வேறு வழி இல்லை என்ற நிலைமை உருவானது.

ரத்தத்தில் கோடு கிழித்து பாரதம் துண்டாடப்பட்டது. பாகிஸ்தான் தன்னை முஸ்லீம் நாடாகப் பிரகடனம் செய்து கொண்டது. ஓநாய்களுக்கு நடுவில் எங்களைத் தள்ளிவிட்டீர்கள் என்று கான் அப்துல் கபார் கான் கதறினார். மேற்கு பஞ்சாபிலும், கிழக்கு வங்காளத்திலும் இருந்த ஹிந்துக்களும் சீக்கியர்களும் கொல்லப்பட்டனர். எல்லையோரத்தில் இருந்த ஹிந்துக்கள் தங்கள் பதிலடியை ஆரம்பித்தனர். இரு நாடுகளிலும் உடமைகளை இழந்து, உறவுகளைப் பலி கொடுத்த அகதிகள் குவிந்தார்கள். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் பாரத நாட்டைப் பற்றிய புரிதலே இல்லாமல் ஒரு ஆங்கிலேய வழக்கறிஞர் சிரில் ஜான் ராட்கிளிப் கிழித்த கோடு பல லட்சக்கணக்கான மக்களின் தலையெழுத்தை புரட்டிப் போட்டது.

நாட்டைத் துண்டாடிய ஆங்கிலேய அரசு பாரதத்தில் இருந்த சமஸ்தானங்களை பாரதநாட்டில் இணைய வேண்டுமா, பாகிஸ்தானோடு இணைய வேண்டுமா அல்லது தனியே சுதந்திரமாக இருக்க வேண்டுமா என்பதை அந்தந்த மன்னர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு பிச்சைக்காரன் கையில் உள்ள கிழிந்த துணியைப் போல விட்டுச் சென்றது. காஷ்மீர் மன்னர் தனித்து இயங்க முடிவு செய்தார். பாகிஸ்தான் படைகள் மலைவாழ் மக்கள் என்ற போர்வையில் காஷ்மீரத்தைக் கைப்பற்ற சென்றது. காஷ்மீர் மன்னர் ஹரிசிங் இந்தியாவோடு இணைய சம்மதித்தார். அந்த இணைப்புக்கு காரணமாக இருந்தவர் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் அன்றய சர்சங்கசாலக் குருஜி கோல்வாக்கர் அவர்கள்.

நாடு பிரிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட அரசு சொத்துக்களின் மதிப்பில் விகிதாச்சார அடிப்படையில் பாகிஸ்தானுக்கு அளிக்கப்படவேண்டிய பங்கை அன்றய ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு நிறுத்தி வைத்தது. அந்தப் பணம் பாகிஸ்தானை ஆயுதங்கள் வாங்கவும், பாரதநாட்டுக்கு எதிராகவும் பயன்படும் எனவே அதனைத் தரக்கூடாது என்று அன்றய அரசு முடிவு செய்தது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியே ஆகவேண்டும், பணத்தை தரவேண்டும் இல்லை என்றால் வழக்கம் போல சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று காந்தி கூறினார்.

மீண்டும் மீண்டும் ஹிந்து மக்களுக்கு எதிராக காந்தி செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். இனியும் அவர் உயிரோடு இருந்தால் ஹிந்து மக்கள் வாழவே முடியாது எனவே அவரைக் கொன்று விட வேண்டியதுதான் என்று கோட்ஸே அப்போதுதான் முடிவெடுக்கிறார்.
1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் நாள், தனது வழக்கமான பிரார்தனைக் கூட்டத்திற்கு வந்துகொண்டு இருந்த காந்தியை நேருக்கு நேர் நின்று துப்பாக்கியால் சுடுகிறார். நெஞ்சைத் துளைத்த குண்டினால் காந்தி மரணமடைகிறார். சுட்டுவிட்டு தப்பியோட கோட்ஸே முயற்சி செய்யவே இல்லை.

காந்தி கொலை வழக்கு
கோட்ஸே உடன் நாராயண ஆப்தே, திகம்பர் பாட்கே, சங்கர் கிஸ்தயா, விஷ்ணு கார்கே, கோபால் கோட்ஸே, மதன்லால் பாவா, தாத்தாத்ரேய பார்ச்சூரே மற்றும் விநாயக தாமோதர சாவர்க்கர் ஆகியோர் மீது கொலை குற்றம், கொலை செய்ய சதி செய்தது என அரசு வழக்கு தொடர்ந்தது. ஆர் எஸ் எஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது. பின்னர் ஆர் எஸ் எஸ் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. சாவர்க்கர் விடுவிக்கப்பட்டார். நீதிபதி ஆத்மசந்திரன் நாதுராம் கோட்ஸே மற்றும் நாராயண் ஆப்தே ஆகியோர்க்கு மரணதண்டனை விதித்தும், சாவர்க்கரை விடுதலை செய்தும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.
கோட்ஸேவைத் தவிர்த்து மற்றவர்கள் மேல் முறையீடு செய்தனர். சங்கர் கிஸ்தயா மற்றும் தாத்தாத்ரேய பார்ச்சூரேஇருவரை விடுவித்தும் மற்றவர்கள் மீதான தண்டனையை உறுதி செய்தும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1948ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நீதிபதி ஆத்மசரண் முன்னிலையில் கோட்ஸே தனது வாக்குமூலத்தை வாசித்தார். அதில் அவர் இந்தக் கொலைக்கும் மற்றவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் காந்தி கொலைக்கு தான் மட்டுமே காரணம் என்றும் தான் ஏன் காந்தியைக் கொலை செய்ய நேர்ந்தது என்றும் விளக்கினார். இந்த நீண்ட வாக்குமூலத்தை காங்கிரஸ் அரசு யாரும் பிரசுரம் செய்யாமல் இருக்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. வரலாற்றின் பக்கங்களில் தான் செய்தது சரிதான் என்றுதான் தீர்ப்பு எழுதப்படும் என்று கோட்ஸே கூறினார். 1977ஆம் ஆண்டு ஜனதா கட்சி அரசு இந்த தடையை விலக்கி உத்தரவு பிறப்பித்தது.

காந்தி கொலைவழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான திரு ஜி டி கோஸ்லா எழுதிய The Murder of Mahathma என்ற நூலில் உள்ள வரிகள் இவை
The audience was visibly and audibly moved. There was a deep silence when he ceased speaking. Many women were in tears and men were coughing and searching for their handkerchiefs. The silence was accentuated and made deeper by the sound of an occasional subdued sniff or a muffled cough. It seemed to me that I was taking part in some kind of melodrama or in a scene out of a Hollywood feature film. Once or twice I had interrupted Godse and pointed out the irrelevance of what he was saying, but my colleagues seemed inclined to hear him and the audience most certainly thought that Godse's performance was the only worth-while part of the lengthy proceedings. A writer's curiosity in watching the interplay of impact and response made me abstain from being too conscientious in the matter. Also I said to myself: 'The man is going to die soon. He is past doing any harm. He should be allowed to let off steam for the last time.'
I have, however, no doubt that had the audience of that day been constituted into a jury and entrusted with the task of deciding Godse's appeal, they would have brought in a verdict of ' not guilty' by an overwhelming majority.

கோட்ஸே மற்றும் ஆப்தே ஆகியோரின் மரண தண்டனை 1948ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் நாள் அம்பாலா சிறைச்சாலையில் நிறைவேற்றப்பட்டது. கோட்ஸேயின் கடைசி ஆசை தனது அஸ்தி அகண்ட பாரதம் உருவான பின்பு சிந்து நதியில் கரைக்கப்பட்ட வேண்டும் என்பதே.

கோட்ஸே காந்தி கொலைக்கான முழுப் பொறுப்பையும், தண்டனையையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். கொலைக்கான காரணங்களையும் விளக்கியுள்ளார். அவர் தரப்பு நியாயத்தையும் கேட்பதில் தவறில்லைதானே